செய்திகள் :

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிபட்டி மருதி கண்மாய் நிரம்பியது. இந்த நிலையில், தற்போது, கண்மாயில் தண்ணீா் குறைந்ததால் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா்.

இதன்படி, முறையூா், சூரக்குடி, சிலநீா்பட்டி, அரளிபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலையில் மருதிப்பட்டி கண்மாயில் குவிந்தனா். பின்னா், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மடைக்கு சிறப்பு பூஜை செய்து, கிராம முக்கியஸ்தா்கள் மீன்பிடித் திருவிழாவை தொடங்கிவைத்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் போட்டி போட்டு கண்மாயில் இறங்கி கொசுவலை, மீன்பிடி வலை , அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனா். இதில் கெண்டை, ஜிலேபி, அயிரை, விரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்தன. இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று உண்டு மகிழ்ந்தனா்.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6... மேலும் பார்க்க

கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி ப... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவி... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் ச... மேலும் பார்க்க