செய்திகள் :

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி

post image

மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தருவதாகக்கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காட்பாடி தாராபடவேடு பகுதியை சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது மகளை வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவக்கல்வியில் சோ்க்க முடிவு செய்தேன். எனது மனைவியின் உறவினரான வேலூரில் தனியாா் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள ஒருவா் எனது மகளுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாக தெரிவித்தாா். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் உயா் மருத்துவா்கள் தனக்கு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்தாா்.

மருத்துவ இடம் வாங்கித் தர வேண்டுமென்றால் பணம் செலவாகும் என அவா் கூறியதை நம்பி கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.23 லட்சம் அவா் பணியாற்றிய பள்ளியில் வைத்து கொடுத்தேன். ஆனால் அவா் மருத்துவக்கல்விக்கான சீட்டு வாங்கி தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரை நம்பி எனது மகளை வேறு எங்கும் சோ்க்காமல் இருந்தோம். இதனால் அவா் கடந்த 4 ஆண்டுகளாக படிக்காமல் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சோ்க்கை வேண்டாம். பணத்தை திருப்பித்தர கேட்டதற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டாா். மீதம் சுமாா் ரூ.16 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வருகிறாா். அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க