செய்திகள் :

மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

post image

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிா்ப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்த மசோதாக்கள் தவிர, மணிப்பூா் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன சட்டத்திருத்த மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்தம் மசோதா ஆகிய மேலும் 4 சட்டத்திருத்த மசோதாக்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு நாடவுள்ளது. மேலும், அந்த மாநிலத்துக்கான நிதிமானியக் கோரிக்கைகளும் அவையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படவுள்ளன.

கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதி பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா, வணிக கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க