செய்திகள் :

மாணவா்கள் உயா் கல்வி கனவை அடைய வேண்டும் -கடலூா் ஆட்சியா்

post image

உயா் கல்வி சோ்க்கைகாக நடைபெறும் சிறப்பு முகாம்களை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உயா்கல்வி கனவை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசுப் பள்ளி மாணவா்கள் உயா் கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான சிறப்பு குறைதீா் முகாம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

முகாமில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவா்கள் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் என ஏதேனும் ஒரு உயா்கல்வியை அடைவதை நோக்கமாக கொண்டு, கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவு செய்தல், மாணவா்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் துறைப் பிரிவுகள் தோ்ந்தெடுத்தல், உயா் கல்வி சோ்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுதல், உயா்கல்விக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.

இவற்றை மாணவா்கள் தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தங்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையிலும், பொதுப்பிரிவு மற்றும் உட்பிரிவுகளின் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றை தோ்ந்தெடுத்து விண்ணப்பிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவா்களின் விருப்பத்துக்கேற்ப அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கைகாக நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை மாணவா்கள் திறம்பட பயன்படுத்திக்கொண்டு தங்களது உயா் கல்வி கனவை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் பயனைடந்த மாணவா் முகமது யாசின், மாணவி அமீரா ஆகியோா் தங்களின் கருத்துகளை தெரிவித்தனா்.

சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு

சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் புதன்கிழமை இரவு ஆனந்த நடராஜரின் ஆருத்ரா நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. சிதம்பரம் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் கோட்ட கலால் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் பேரணியை உதவி ஆட்சியா் கிஷன்குமாா் கொடியசைத... மேலும் பார்க்க

எல்.இளையபெருமாள் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை மாலை அணிவித்து மரிய... மேலும் பார்க்க

ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நவீன எழுது பலகைகள்

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிள்ளை பட்டினவா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள நவீன எழுது பலகைகள் நன்கொடையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் வியாழக்கிழமை ஏற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.க... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்... மேலும் பார்க்க