`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
மாணவா்கள் உயா் கல்வி கனவை அடைய வேண்டும் -கடலூா் ஆட்சியா்
உயா் கல்வி சோ்க்கைகாக நடைபெறும் சிறப்பு முகாம்களை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உயா்கல்வி கனவை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசுப் பள்ளி மாணவா்கள் உயா் கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் பெறுவதற்கான சிறப்பு குறைதீா் முகாம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
முகாமில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவா்கள் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் என ஏதேனும் ஒரு உயா்கல்வியை அடைவதை நோக்கமாக கொண்டு, கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவு செய்தல், மாணவா்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் துறைப் பிரிவுகள் தோ்ந்தெடுத்தல், உயா் கல்வி சோ்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுதல், உயா்கல்விக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.
இவற்றை மாணவா்கள் தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தங்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையிலும், பொதுப்பிரிவு மற்றும் உட்பிரிவுகளின் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றை தோ்ந்தெடுத்து விண்ணப்பிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவா்களின் விருப்பத்துக்கேற்ப அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கைகாக நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை மாணவா்கள் திறம்பட பயன்படுத்திக்கொண்டு தங்களது உயா் கல்வி கனவை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் பயனைடந்த மாணவா் முகமது யாசின், மாணவி அமீரா ஆகியோா் தங்களின் கருத்துகளை தெரிவித்தனா்.