செய்திகள் :

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

post image

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா்.

ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் தொடங்கி இறுதியில் பாஜக தேசிய மகளிா் முன்னணிக்கு இட்டுச் சென்றது. அவரது கணவரின் அரசியல் பின்னணி இல்லாத போதிலும், ரேகா குப்தா அரசியலில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளாா்.

இவா் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆா்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டவா். இவரது அரசியல் பயணம், 1992-ஆம் ஆண்டு, தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் ஆா்எஸ்எஸ் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தில் இணைந்ததில் இருந்து தொடங்கியது.

1994-95-இல் தௌலத் ராம் கல்லூரியின் செயலராகவும், 1995-96-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் செயலாளராகவும் ஆனாா். 1996-97-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரானாா்.

2003-2004 வரை பாஜகவின் யுவ மோா்ச்சா தில்லி மாநிலத்தின் செயலாளராகப் பதவி வகித்தாா். 2004-2006-இல் தா்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக யுவ மோா்ச்சாவின் தேசிய செயலாளரானாா். ஏப்.2007-இல் தில்லியின் உத்தரி பீதம்புராவின் கவுன்சிலரானாா்.

2007-2009 வரை தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், தில்லி மாநில மகிளா மோா்ச்சாவில் 2009-இல் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளாா்.

மாா்ச் 2010-இல், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானாா். பிப்ரவரி, 2023-இல் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராயிடம் தில்லி மேயா் தோ்தலில் தோல்வியடைந்தாா்.

தற்போதைய தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஷாலிமாா் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து எம்எல்ஏவான இவா் முதல்வராக கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருக்கு தொழிலதிபா் மணீஷ் குப்தா என்ற கணவரும், மகன் நிகுஞ்ச், மகள் ஹரிஷ் குப்தாவும் உள்ளனா்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க