செய்திகள் :

மாதாந்திர நிதியுதவி: 8 லட்சம் பெண்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிய மகாராஷ்டிரா அரசு!

post image

மகாராஷ்டிராவில் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக இத்திட்டம் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டது. அந்நேரம் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் ஆவணங்களை சரிபார்க்காமல் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது தேர்தலில் வெற்றி வெற்றுவிட்டதையடுத்து பா.ஜ.க கூட்டணி அரசு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மாதாந்திர நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக பெண்கள் கொடுத்து இருக்கும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதோடு அங்கன்வாடி ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே நமோ சேத்கரி மகாசம்னான் நிதி என்ற திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் பெண்களும் முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தில் ரூ.1500 பெற்று வந்தனர். அவ்வாறு இரண்டு திட்டத்தில் நிதியுதவி பெறும் 8 லட்சம் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தில் 500 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்திற்கு இதுவரை மொத்தம் 2.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அதில் 11 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போது மேலும் 8 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான ஆய்வுக்கு பிறகு 15 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்திருந்தார். இது தொடர்பாக பட்னாவிஸ் கூறுகையில்,'' இத்திட்டத்திற்கான விதிமுறைகளில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதில் பயனடைய சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில்தான் இப்போது செயல்பட்டு வருகிறோம்''என்று தெரிவித்தார். இத்திட்டத்தில் பயனடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் மற்றும் மகாராஷ்டிரா குடியுரிமை சான்றிதழ் போன்றவை இருக்க வேண்டும். 4 சக்கர வாகனம், குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் இருந்தாலும் அக்குடும்பத்தில் யாரும் விண்ணப்பிக்க முடியாது. மாநில அரசு ஏற்கனவே இத்திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்படும் நிதியில் 10 ஆயிரம் கோடியை குறைத்துவிட்டது. தற்போது இத்திட்டத்தில் 2.46 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க