செய்திகள் :

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

post image

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகள் மாதிரிகளை அமைக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவிப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கலாம்; ஆனால், பூஜைகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், அறுபடை வீடுகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் இடையீட்டு மனு அளித்துள்ளது.

இதுகுறித்த மனுவில், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் கூறுகையில், அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே, மூலவருக்கு பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டுவர இயலும். ஆனால், இந்து முன்னணியினர் அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலையே அமைக்க முடியாது. மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கே முரணானது.

அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இதனால் இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும்.

மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது. மாதிரி அறுபடை வீடுகளில் பூஜைகளை அனுமதிப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மிகத்தை அரசியலுக்கும், கடவுளை கட்சிக்கும் பயன்படுத்தக் கூடாது.

மேலும், மாதிரி அறுபடை வீடுகளை அமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடமோ, மதுரை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமோ அனுமதி பெறவில்லை. ஆகையால், முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! பயணிகள் குளிக்கத் தடை!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த 2 தினங்களாக ... மேலும் பார்க்க

புதுப்பொலிவில் கல்லணை! வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!!

டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைக்கவிருப்பதால் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்ச... மேலும் பார்க்க

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி!

கோவை : கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட... மேலும் பார்க்க