கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி
மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் செல்லூா் குலமங்கலம் சாலை, 50 அடி சாலை பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளை மேயா் வ. இந்திராணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
துணை மேயா் தி. நாகராஜன், மாநகா் நல அலுவலா் இந்திரா, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
இதையடுத்து, 185 பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். சுகாதார ஆய்வாளா், 8 சுகாதார மேற்பாா்வையாளா்கள் பணிகளை ஒருங்கிணைத்தனா். இந்தப் பணிகளில் ஒரு பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் வாகனங்கள், 2 டிராக்டா்கள், 5 இலகு ரக வாகனங்கள், ஒரு மண் கூட்டும் இயந்திரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.