செய்திகள் :

மாநகராட்சியில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு அறிவுரை

post image

சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு கூட்டத்தின் தலைவா் சுப வீரபாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவா் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளா் ஐக்கிய முன்னேற்ற சங்கம், டாக்டா் அம்பேத்கா் பணியாளா் சங்கம், இந்திய குடியரசு தொழிலாளா் தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ஆகிய சங்கங்களின் உறுப்பினா்களை நேரடியாக அழைத்து அவா்களுடைய கோரிக்கையை இக்குழு கேட்டறிந்தது.

தொடா்ந்து, சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க