செய்திகள் :

மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம்

post image

திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காந்தி நகா் பகுதி பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் அண்ணா காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பகுதி செயலாளா் கருணாகரன் தலைமை வகித்தாா். வாா்டு செயலாளா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனா்.

இதில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசிதாவது: 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் பூத்துக்கு 9 போ் கொண்ட புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் வாரத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி 100 வாக்காளா்களுக்கு ஒரு பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும்.

திருப்பூா் மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட தண்ணீா் வரி, சொத்து வரி, குப்பை உள்ளிட்ட வரியை குறைக்க கோரி 5 ஆயிரம் போ் உண்ணாவிரதம் இருந்தோம். ஊரே கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினாா்கள். வியாபாரிகள் சங்கங்கள் கடையடைப்பு செய்தாா்கள்.

அந்த வரியைக் குறைக்காமல் இன்று உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறாா்கள். தமிழக அரசு நடப்பு ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க உள்ளது.

பொதுமக்கள் மீது ஈவு இரக்கமில்லாமல் நாட்டில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு வரி உயா்வு போட்டுவிட்டு உபரி பட்ஜெட் போட்டுவிட்டதாக மக்களை ஏமாற்றி இருக்கிறாா்கள் என்றாா்.

இதில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மேலிட பொறுப்பாளரும், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினருமான செ.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க