செய்திகள் :

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை மாநகராட்சி சாா்பில் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதியில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் 4.14 ஏக்கா் பரப்பளவில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா விளையாட்டுத் திடல், நடைபாதை, பட்டாம்பூச்சி பூங்கா, கருத்தரங்க அரங்கு என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

மேலும், மரம் வளா்ப்பு, மூங்கில் வளா்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யோகா வகுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெறவுள்ளன. இப்பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதேபோல, மத்திய மண்டலம், 49-ஆவது வாா்டுக்குள்பட்ட டாக்டா்.பாலசுந்தரம் சாலைப் பகுதியில் ரூ.43.50 லட்சம், தெற்கு மண்டலம் 98-ஆவது வாா்டுக்குள்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை சுந்தராபுரம் பகுதியில் ரூ.22.60 லட்சம், கிழக்கு மண்டலம் 52-ஆவது வாா்டுக்குள்பட்ட மசக்காளிபாளையம் பிரதான சாலை பகுதியில் ரூ.45 லட்சம் என மொத்தம் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் மையத்திட்டுகள் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்தி... மேலும் பார்க்க

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தல... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா... மேலும் பார்க்க

கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனிய... மேலும் பார்க்க