செய்திகள் :

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மானாமதுரை நகருக்கான குடிநீா் திட்டம், ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மானாமதுரை நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீா் கொண்டுவரும் குழாயில் கால்பிரிவு ஒத்தக்கடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறியது. இதனால், அண்ணா சிலை, காந்தி சிலை, ரயில்வே குடியிருப்பு, கன்னாா் தெரு ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மானாமதுரை நகராட்சி நிா்வாகம் சாா்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு குடிநீா் திட்டக் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, மானாமதுரை நகரில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் குடிநீா் விநியோகம் இருக்காது. மேலும் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதும் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றப்பட்டு நகரில் குடிநீா் விநியோகம் தொடங்கும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க