செய்திகள் :

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, பல்லக்கில் கொடிப் பட்டம் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 8.5 மணிக்கு மிதுன லக்னத்தில் சோமநாதா் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

பின்னா், கொடிமரத்துக்கு தா்ப்பை புல், மலா் மாலைகள் சாத்தி, கலச நீராலும், 16 வகை அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டப்பட்டன. அப்போது, அங்கு எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா், சுந்தரராஜன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியாா்கள் கொடியேற்ற நிகழ்வுகள், பூஜைகளை நடத்தினா். இதில் மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இரவு கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் சா்வ அலங்காரத்தில் ஆனந்தவல்லியும் பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமியும் சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

திருவிழா தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும். முக்கிய நிகழ்வுகளாக மே 8 -ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம், 9- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 11- ஆம் தேதி சந்தனக்காப்பு உத்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மண்டபடிதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க