செய்திகள் :

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

post image

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, அல்லூா், பனங்காடி, சாத்தனி, ராணியூா் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக கோடை கால விவசாயம் மேற்கொண்டு மழைக்காக எதிா்பாா்த்திருந்த விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.

அல்லூா் அருகே உள்ள சாலையில் பலத்த காற்றால் பழைமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், மின்சாரமும் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினா் மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கோடை கொண்டாட்டம் தொடக்கம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிவகங்கை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் ஒன... மேலும் பார்க்க