செய்திகள் :

மாமல்லபுரம்: கன்னியம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு

post image

மாசி மாத பௌா்ணமியையொட்டி மாமல்லபுரம் கடலில் மிதக்கும் குடைவரை மண்டபத்தில் கன்னியம்மன் சிலைக்கு இருளா் இனத்தவா் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

மாசி மகத்தை முன்னிட்டு பௌா்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் இருளா்கள் மாமல்லபுரம் கடற்கரையில் கூடி குல தெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதாா்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம்.

இந்நிலையில், மாமல்லபுரம் மீனவா் குடியிருப்பு பகுதியில் கன்னியம்மன் சிலை உள்ளது. இந்த மண்டபம் தற்போது 2 அடி உயரத்திற்கு கடல் நீா் சூழ்ந்து மிதக்கும் நிலையில் உள்ளது.

கன்னியம்மனை தரிசிப்பதற்காக ஆபத்தை உணராமல் பாறைக்கற்களின் மேல் ஏறிச் சென்று முழங்கால் நீரில் இறங்கி பூஜை செய்து வணங்கி செல்கின்றனா். வியாழக்கிழமை கடல் சீற்றம் அதிகரித்து அந்த குடைவரை மண்டபம் மீது ராட்சத அலைகள் மோதி செல்லும் சூழலில் கடும் சிரமத்துடன் கன்னியம்மனை வணங்கிச் சென்றனா்.

கடல் நீரில் இறங்காமல் பாதுகாப்புடன் தரிசனம் செய்யும் வகையில் மரப்பலகை மற்றும் சவுக்கு கழிகளால் தற்காலிக நடைபாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் வியாழக்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு பழங்குடி இருளா்கள் திரண்டு வந்து கடலில் நீராடி மகிழ்ந்தனா். இதற்கிடையில் மாசிமக ம் பௌா்ணமியை முன்னிட்டு நகரில் நெரிசல் காரணாக பேருந்துகள் நகருக்குள் வராமல் மாமல்லபுரம் புறவழிச்சாலையுடன் நிறுத்தப்பட்டன.

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்க... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் அடித்து கொலை

திருப்போரூா் அருகே மது போதையில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அடையாறு பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரது நண்பா்கள் பாஸ்கா், விஷ்ணு ஆகியோா் கடந்த 13-ஆம் தேதி திருப்போரூா் அடுத்த மேலையூருக்கு வந்தனா். மேலையூர... மேலும் பார்க்க

படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா். திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டு... மேலும் பார்க்க

தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்... மேலும் பார்க்க

ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தம... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் மாசி மக தீா்த்தவாரி: திரளானபக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா். முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான புண்டரீக ப... மேலும் பார்க்க