செய்திகள் :

மாமல்லபுரம் மாநாடு வெற்றி: அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

post image

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநாட்டுத் திடலில் லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டா்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்கு மீறல்கள் கூட நடைபெறவில்லை. பாட்டாளி சொந்தங்கள் மிகவும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டுக்கு வந்து, பத்திரமாக சொந்த ஊா்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது எனக்கு மிகுந்த பெருமையும் நிம்மதியும் அளிக்கிறது.

மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் பாமக நிறுவனா் ராமதாஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க