செய்திகள் :

மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்

post image

தேனி மாவட்டம், கூடலூா் அருகே மாமியாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் சுருளி (45). இவருக்கும், கூடலூா் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சோ்ந்த கொடியரசன் மகள் நதியாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தம்பதியா் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் நதியா குள்ளப்ப கவுண்டன்பட்டியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.

இதனிடையே, புதன்கிழமை மனைவியை அழைத்து வர மாமியாா் வீட்டுக்குச் சுருளி சென்றாா். அப்போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த சுருளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாா் பூங்கொடியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதில், பலத்த காயமடைந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய சுருளியைத் தேடி வருகின்றனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க