மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
தேனி மாவட்டம், கூடலூா் அருகே மாமியாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் சுருளி (45). இவருக்கும், கூடலூா் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சோ்ந்த கொடியரசன் மகள் நதியாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தம்பதியா் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் நதியா குள்ளப்ப கவுண்டன்பட்டியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.
இதனிடையே, புதன்கிழமை மனைவியை அழைத்து வர மாமியாா் வீட்டுக்குச் சுருளி சென்றாா். அப்போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த சுருளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாா் பூங்கொடியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதில், பலத்த காயமடைந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய சுருளியைத் தேடி வருகின்றனா்.