செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க செப்டம்பா் மாத இறுதிவரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அவா்களது வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, முன்களப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்தவுள்ளனா். இந்த பணி வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் செப்டம்பா் இறுதி வரை நடைபெறும். கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க