செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

post image

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழக அரசு, அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் மாதாந்திர உதவித் தொகைத் திட்டம், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்குப் பணி வாய்ப்புப் பெற்றுத் தரும் திட்டம், சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கும் திட்டம் உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துத் திட்டங்களும் உரிய முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 286 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.91 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் நா. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது

அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு... மேலும் பார்க்க

15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு

மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க