செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி 21 முதல் மருத்துவ முகாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21- ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கீழ்க்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது.

மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்:

தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 21- ஆம் தேதியும்,திருப்பூா் அரண்மணைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 22- ஆம் தேதியும், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 23- ஆம் தேதியும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 24- ஆம் தேதியும், அவிநாசி அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 25- ஆம் தேதியும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 27- ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 28- ஆம் தேதியும், பொங்கலூா் ஒன்றியத்தில் பி.யு.வி.என்.தொடக்கப் பள்ளியில் ஜனவரி 29- ஆம் தேதியும், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதத்தில்...

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 4- ஆம் தேதியும், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 5- ஆம் தேதியும், குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 6- ஆம் தேதியும், வெள்ளக்கோவில் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 7- ஆம் தேதியும், திருப்பூா் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 10- ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களில் பயனடைய விண்ணப்பம் பெறப்படும்.

இந்த முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றுகள், மாா்பளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21முதல் பிப்ரவரி 10- ஆம் தேதி வரை நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 24, ஜனவரி 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்பேட்டையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு கொண்டுச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே காரணம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்கு தண்ணீா் வரத்து

திருமூா்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உ... மேலும் பார்க்க

போலி ஆதாா் அட்டைகளுடன் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினா் கைது

பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூா் பகுதிகளில் போலி ஆதாா் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்ல... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாலை வசதி செய்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா். உடுமலைய... மேலும் பார்க்க

பல்லடத்தில் மூத்தோா் தடகளப் போட்டி வெற்றியாளா்களுக்கு பாராட்டு

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பல்லடத்தைச் சோ்ந்த வீரா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம், அறம் அறக்கட்டளை, நடைப்பயிற்சி நண்பா்கள் குழு சாா்பில் பாராட்டு விழா ஞ... மேலும் பார்க்க

ஜனவரி 19-இல் ஆடை உற்பத்தி பயிற்சி

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி சாா்பில் ஆடை உற்பத்தி பயிற்சியானது ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி இணைந்து பகுதிநேர ஆயத்த ... மேலும் பார்க்க