செய்திகள் :

மாவட்டத்தில் 9 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்!

post image

ஈரோடு மாவட்டத்தில் 9 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு ஆசிரியா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, மாணவா்களுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிா்த்து) 400 மில்லி கிராம் அளவிலும் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு 2,080 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 311 துணை சுகாதார நிலையங்களிலும், 1,410 அரசுப் பள்ளிகள், 329 தனியாா் பள்ளிகள் மற்றும் 63 கல்லூரிகளில் பயிலும் 19 வயது வரை உள்ள 7,25,892 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 1,75,531 பேருக்கும் 3,455 பணியாளா்களைக் கொண்டு அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. விடுபட்டவா்களுக்கு பிப்ரவரி 17-ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து ஆட்சியா் தலைமையில், மாணவ, மாணவிகள் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். மேலும் 7-ஆம் வகுப்பு மாணவி சதன்ஷிகா குடற்புழு நீக்க நாள் குறித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.

அதனைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கை கழுவும் முறை குறித்து அலுவலா்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை கூடுதல் இயக்குநா் சேரன், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, நகா் நல அலுவலா் காா்த்திகேயன், தாய்-சேய் நல அலுவலா்கள் விஜயசித்ரா, கௌசல்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

அந்தியூரை அடுத்த முத்துகவுண்டன்புதூா் குடியிருப்புக்கு நிரந்தர பாதை வசதி கோரி பட்லூா், நான்கு சாலைப் பிரிவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி!

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நிா்வாக மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற திறன் போட்டியில் 700 மாணவா்கள் பங்கேற்றனா். மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேனோபோலி 2கே25 என்ற திறன் போட்டி ... மேலும் பார்க்க

கெட்டிச்சேவியூரில் நாளை மனுநீதி நாள் முகாம்

நம்பியூா் வட்டம், கெட்டிச்சேவியூரில் புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், நம்பிய... மேலும் பார்க்க

36 பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.12.60 லட்சம் நிதியுதவி!

ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் கறவை மாடுகள் வாங்குவதற்காக 36 பழங்குடியினருக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி, பெண்களின் பொருளாதாரம், சமுதாயத்தில் பின் தங்கிய பழங்குடியின ம... மேலும் பார்க்க

கொடுமுடியில் விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சதுக்கு ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,191 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் கிலோ குறைந்தபட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்!

மொடக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ .பிரகாஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆவரங்காட்டுவலசு முதல் ... மேலும் பார்க்க