`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்
தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு சாா்பில் இயந்திரத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிப்பதற்கு தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்டவராகவும், 25 வயதுக்கு மேற்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதவரவற்றவா் என்பதற்கு வட்டாட்சியரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண்: 67-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.