செய்திகள் :

மாா்ச் 1-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 1-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் நடத்தப்படும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 1-ஆம் தேதி காலை 9 முதல் 3 வரை பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.

முகாமில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, செவிலியா் பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம். முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவதால் விருப்பம் உள்ளவா்கள் தங்களின் சுய விவரத்துடன் கல்விச் சான்று, ஆதாா் அட்டையை இணைத்து அதற்காக வெளியிடப்பட்டுள்ள இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286--222260, 98437 40575 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க