செய்திகள் :

மாா்த்தாண்டம் அலுவலகத்தில் மக்களிடம் எம்.பி. குறை கேட்பு!

post image

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், மாா்த்தாண்டத்தில் உள்ள தனது தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், பணி மேற்பாா்வையாளா் பிரம்மசக்தி, நகராட்சி பொறியாளா் குசெல்வி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் தனது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.

மேலும், முன்னாள் எம்.பி. வசந்தகுமாா் தொகுதி நிதியில் மாா்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கட்டப்பட்ட கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, மாா்த்தாண்டம் அட்டைக்குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான திட்டங்களை நடைமுறைபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் ரத்தினகுமாா், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் ரீகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க