`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீன...
`மிகப்பெரிய வீழ்ச்சி வரும்!' எச்சரிக்கும் Rich Dad Poor Dad எழுத்தாளர் பரிந்துரைப்பது என்ன தெரியுமா?
பணக்கார தந்தை, ஏழை தந்தை (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் வெள்ளி குறித்து தனது வலுவான கணிப்பைக் கூறினார். வெள்ளி விலையானது இரு மடங்கு அல்லது பல மடங்காக அதிகரிக்கும் எனக் கணித்திருந்தார். ஒரு அவுன்ஸ் வெள்ளி விலையானது 75 டாலர் வரையில் கூட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணம் ஒரு வருடத்தில் 400% வரை அதிகரிக்கலாம் என்றும், அதாவது 100 டாலர் முதலீடானது 500 டாலராக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். கியோசாகி தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக வெள்ளி சிறந்த முதலீடாக இருக்கும். வெள்ளி விலையானது செயற்கையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இது வெடிக்கப்போகிறது.
வெள்ளியானது தற்போது வரையில் அனைவரும் வாங்கும் விலையில்தான் உள்ளது. ஆனால் விரைவில் அதுவும் ஏற்றம் கண்டு விடும். இது விலை உயர்ந்த மதிப்புமிக்க ஆபரணமாக மட்டும் அல்லாது, தொழில் துறையில் பயன்படுத்தப்படும் உலோகமாக உள்ளது. ஆக, அதன் எதிர்கால தேவை அதிகரிக்கலாம். இது விலை தொடர்ந்து உச்சம் தொடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தார்.
எது பெஸ்ட்?
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி வரவிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு சரியலாம். இதிலிருந்து முதலீட்டாளர்கள் தப்பிக்கக் காகித சொத்துகளைத் தவிர்த்து, தங்கம் வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது குறைந்த விலையில் இருக்கும் வெள்ளியில் அதிக கவனம் செலுத்தலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான லாபத்தைப் பெறலாம் என்றும் கணித்துள்ளார். ஆக வெள்ளி விலையானது குறையும் போதெல்லாம் வாங்கி போடலாம். இது எதிர்காலத்தில் சிறந்த லாபம் பார்க்க உதவிகரமாக இருக்கலாம்.

சமூக வலைதளத்தில் என்ன அப்டேட்?
சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பல முக்கிய அப்டேட்களை கொடுத்து வரும் ராபர்ட் கியோசாகி, "முன்னதாக, உலக வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி ஒன்று வரப்போவதாக ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தில் கணித்திருந்தேன். அந்த வீழ்ச்சி நடப்பு ஆண்டில் இருக்கலாம். இதனால் ஓய்வூதியங்கள் அழிக்கப்படலாம். பலர் வீடுகளை இழந்தும் அல்லது குழந்தைகளுடன் அடித்தளத்தில் வசிப்பவர்களாக இருக்கலாம். இது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தேன். மேலும் காகிதங்களில் அச்சிடப்பட்ட சொத்துகளில் சேமிக்க வேண்டாம் என்று எச்சரித்து வருகிறேன். உண்மையான சொத்துகளில் முதலீடு செய்யுங்கள்.
பணத்தை மட்டுமே சேமிப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் எனக் கூறி வருகிறேன். ஏனெனில் பணத்தை வெறுமனே சேமிப்பவர்கள் பணத்தின் மதிப்பை இழப்பார்கள். ஏனெனில் பணவீக்கம் என்பது அவர்களின் சேமிப்பின் மதிப்பைக் குறைத்து விடும். மேலும் இந்த ஆண்டுக்குள் உலகப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் ஆகியவற்றைச் சேமிக்கக் கூறி வருகிறேன்.

சமீபத்திய அப்டேட் ஒன்றில், இன்றளவில் வெள்ளி மற்றும் எத்தேரியம் சிறந்த முதலீடாக இருக்கலாம் என நம்புகிறேன். ஏனெனில் அவை மதிப்பு மிக்கவை. அவை தொழில் துறையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் விலை குறைவாகவே காணப்படுகின்றன. ஆக, வெள்ளி மற்றும் எத்தேரியத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றித் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். அதன் விலை ஏற்றத்தின் பலனையும் பெறுங்கள். இது குறிப்பாகப் பணமதிப்பிழப்பு காலங்களில் பக்க பலமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.
ஜிம் ரோஜர்ஸ் கணிப்பு என்ன?
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் கமாடிட்டி குருவான ஜிம் ரோஜர்ஸ், தன் வசம் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே இருப்பதாகவும், ஆனால் அவை இரண்டையும் விற்பனை செய்யும் திட்டம் தன்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் அது தன் குழந்தைகளுக்கு தேவை என்றும் கூறியுள்ளார். அந்தளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி மீது நீண்ட கால அடிப்படையில் நம்பிக்கை வைத்துள்ளது இதன் மூலம் தெரிகிறது.
ஆங்கில செய்தித் தளத்திற்கு இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், "சந்தையை ஒரு போதும் நேரப்படி கணக்கிட முயலவில்லை, தற்போதைய சூழலில் எந்த ஒரு சொத்து மலிவாக இருக்கிறதோ, அதை வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பேன். நான் அவ்வளவு புத்திசாலி அல்ல, ஒரு பொருள் விலை குறைந்தால் அதை வாங்குவது புத்திசாலித்தனம். ஒரு பொருள் புதிய உச்சத்திலிருந்தால் அதை வாங்குவது சரியான ஒன்றல்ல. தற்போது தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில், அவற்றில் முதலீடுகளைச் சேர்க்கத் திட்டம் இல்லை" எனக் கூறும் ரோஜர், சமீபத்தில் முரண்பாடாக இருந்தாலும் வெள்ளியை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் தங்கம் தொடர்ந்து பல வருடங்களாக உச்சத்தை எட்டி வருகிறது. ஆனால் வெள்ளி அப்படி இல்லை. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை இன்னும் மலிவாகக் காணப்படுகிறது. ஆக, வெள்ளிக்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதனால்தான் தான் வெள்ளியை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
வெள்ளி விலையானது சமீபத்தில் வலுவான ஏற்றம் கண்டது. ஏனெனில் அது அந்தளவுக்குச் சரிவையும் கண்டிருந்தது. அதேசமயம் தங்கம் விலை ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே வரலாறு காணாத உச்சத்தில் காணப்பட்டது. தற்போதும் உச்சத்தில் காணப்படுகிறது. ஆக, இது பெரிதாக ஏற்றம் காண வாய்ப்பில்லை என்பதையே மறைமுகமாக கூறியுள்ளார்.
ஏன் தங்கம், வெள்ளி முக்கியம்?
பொருளாதார வளர்ச்சி குறித்து தனது அறிக்கையில் கூறியுள்ள ரோஜர்ஸ் அதிகப் பணம் அச்சிடுதல் மற்றும் கடன் மிகப்பெரிய கவலையளிக்கும் ஒரு காரணிகளான உள்ளன. உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள், குறிப்பாக அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கடன் பிரச்சனையில் உள்ளது. தொடர்ந்து அவை பணத்தை அச்சிட்டு வருகின்றன. பணத்தை அதிக அளவில் அச்சிடும் போது, புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு குறைகிறது. இது பணவீக்கத்திற்கும் வழிவகுக்கிறது. மக்களின் சேமிப்பையும் நசுக்குகிறது. இந்த சூழலிலிருந்து முதலீட்டாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தைப் பார்க்க வேண்டும்.

நிபுணர்கள் பலரும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது நேரத்தை வீணப்படிப்பது எனக் கூறுவார்கள். அவர்கள் என்ன கூறினாலும் கவலையில்லை. நவீன அறிவுரைகளைப் புறக்கணிக்கும் அவர், உலகெங்கிலும் உள்ள அரசுகள் கரன்சிகளின் மதிப்பைச் சிதைக்கும் போது, மக்கள் தங்கள் பணத்தை நிலையான மதிப்பில் வைத்திருக்கவே நினைப்பார்கள் எனக் கூறுகின்றார். ஆக தங்கம், வெள்ளிக்கு மவுசு குறைவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.