செய்திகள் :

மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

post image

இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சிறப்பான தருணம்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்தோம். ஆடுகளத்தில் களமிறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளோம். எங்களுக்கு அனைத்து சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐ-க்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

இதையும் படிக்க: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான அறிமுக டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா சாதனை; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மு... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க