செய்திகள் :

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

post image

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு இடங்களில் 552 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவினாலும் கடுமையான மழையாலும் 152 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 198 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், அப்பகுதிகளில் சிக்கியிருந்த 92 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்த சம்பங்களில், சம்பாய் மாவட்டத்தில் 3 பேர் மற்றும் அய்சால், செர்ச்சிப் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருள்களைக் கொண்டுச் சென்ற 100-க்கும் மேற்பட்ட லாரிகள் செர்ச்சிப் மாவட்டத்தில் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரமின் 11 மாவட்டங்களில், மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துக்கொள்ளும் சம்பாய் மாவட்டத்தில் அதிகப்படியாக 209 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், கடந்த 3 நாள்களில் மட்டும் அய்சால் மாவட்டத்தில் 253.7 மி.மீ. அளவிலான மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!

புது தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி சரணடையும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி இதுவரை வாய் ... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 5வது நாளில் 44 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த 44 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று இரவு பெய்த கனமழ... மேலும் பார்க்க

45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ கிராம் தூய தங்கம் சேர்த்து கட்டப்பட்டுள்ளதாக கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். அயோத்தியில் பிரம்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநில... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க