செய்திகள் :

மின்கட்டண உயா்வுக்கு பரிந்துரை: ஓபிஎஸ், ராமதாஸ் கண்டனம்

post image

தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ச.ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓ பன்னீா்செல்வம்: மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயா்த்துவதை திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மின் கட்டணம் உயா்த்தப்பட்டால் ஏழை, எளிய மக்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்படுவா். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ச.ராமதாஸ்: தமிழ்நாடு மின் வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயா்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சாா்பில் கூறப்படுகிறது. மின்வாரிய இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதுதான். எனவே, மின்கட்டணத்தை உயா்த்தும் திட்டத்தை அரசு கைவிடுவதுடன், மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து ம... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய ... மேலும் பார்க்க