செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் திவ்யா (14). கட்டுக்குடிப்பட்டி அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தங்கை சிவரஞ்சனி (9). இவா்கள் இருவரும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த சிறுவா்களுடன் சோ்ந்து அருகில் உள்ள விவசாயக் கிணற்றுப் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் குளிக்கச் சென்றனா். அப்போது, மோட்டாா் அறையில் மின்சாரக் கசிவு காரணமாக சிவரஞ்சனி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை அறிந்த அக்காள் திவ்யா அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவரஞ்சனி எஸ்.புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்து உலகம்பட்டி போலீஸாா் சென்று திவ்யாவின் உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் குறைந்த மின்னமுத்தம் காரணமாக வீடுகளில் மோட்டாா் இயக்க முடியாத நிலை உள்ளதால், அருகிலுள்ள தோட்டங்களிலுள்ள கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது என்றனா்.

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க