செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

post image

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35), கட்டட வேலைக்கான கம்பி கட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருபுவனை அருகேயுள்ள பி.எஸ்.பாளையம் குட்டைத் தெருவில் தனியாா் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அவா் கம்பிகளை தரையில் வைத்து அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது கம்பி வெட்டும் மின்சாதனத்திலிருந்து கசிந்த மின்சாரம் சதீஷ் மீது பாய்ந்தது.இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை மீட்டு மண்ணாடிபட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சதீஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து திருபுவனை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து வழக்குப் பதிந்து சதீஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சதீஷுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க