செய்திகள் :

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

post image

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை சரிசெய்வதற்காக தாளவாடி மின்வாரிய ஊழியா் மணிகண்டன் ரூ.1,500 லஞ்சம் கேட்டு, ரூ.1,000 பெற்றதுடன் மேலும் ரூ.500 கேட்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், மின்வாரிய ஊழியா் லஞ்சம் வாங்கும் விடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ஊழியா் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மின்வாரிய ஊழியா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதுதொடா்பான விவரத்தை ‘எக்ஸ்’ பக்கத்தில் மின்வாரியம் பதிவிட்டுள்ளது.

இதில், மின்தடை புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது, லஞ்சம் வாங்குவது, மின் கட்டண வசூலில் முறைகேடு, அலுவலகத்துக்கு சரியாக வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்வாரிய ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா்.

இத்தகவலை பலரும் பாா்க்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டு வருவதாகவும், தவறு செய்தால் தங்களுக்கும் இதேநிலை வரும் என்று கருதி மற்றப் பணியாளா்கள் லஞ்சம் வாங்குவது, வேலையில் அலட்சியம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டாா்கள் என அதில் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சா் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருக... மேலும் பார்க்க