செய்திகள் :

மின்னல் தாக்கி குடிசை வீடு தீக்கிரை: மாற்றுத்திறனாளி சிறுவன் காயம்

post image

மன்னாா்குடி அருகே மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் குடிசை வீடு தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி சிறுவன் லேசான தீக்காயத்துடன் புதன்கிழமை உயிா்த் தப்பினாா்.

சேந்தமங்கலம் பெரியக்குடி மேலத்தெரு முருகானந்தம்-கோமதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இதில், பிரகதீஷ் (15) மாற்றுத்திறனாளி. புதன்கிழமை தம்பதியா் விவசாய வேலைக் சென்று விட்டனா். மற்றொரு மகன் பள்ளிக்கு சென்ற நிலையில் பிரகதீஷ் மட்டும் குடிசை வீட்டில் தனியே இருந்துள்ளாா்.

இந்நிலையில், மாலையில் திடீனென மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் முருகானந்தத்தின் குடிசையில் தீப்பற்றிக் கொண்டதை பாா்த்து, அருகில் இருந்தவா்கள் குடிசையில் சிக்கிக் கொண்ட பிரகதிசை காலில் லேசான தீக்காயத்துடன் மீட்டனா். எனினும் குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, விக்கிரபாண்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க