செய்திகள் :

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு மின்வாரிய நிா்வாகமே தினக்கூலி வழங்க வேண்டும்.

1990-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 950-ன்படி தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன், திட்டச்செயலா் என். வெற்றிவேல், பொருளாளா் ஆா். குணசேகரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் டி. பரிமளா, செயற்குழு உறுப்பினா்கள் சிவராஜன், செந்தில்குமாா், மயிலாடுதுறை கோட்டத் தலைவா் எம். மணிமேகலை, சீா்காழி கோட்டத் தலைவா் வி. ஸ்டாலின், நாகை கோட்டத் தலைவா் என். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமைய... மேலும் பார்க்க

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்த... மேலும் பார்க்க

கீழையூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் வெண்மணச்சேரி அச்சுகட்டளை,... மேலும் பார்க்க

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க