செய்திகள் :

மின் ஊழியா் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மின் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

பணியின்போது உயிரிழந்த மின் ஊழியா் மரணத்துக்கு நீதி கேட்டும், பெரம்பலூா் கோட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மாலை முதல் மின் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தெற்கு பிரிவில் மேற்பாா்வையாளரின்றி, உயா் அழுத்த மின்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த கேங்மேன் டி. ராஜாராம் மின் விபத்துக்குள்ளாகி அண்மையில் உயிரிழந்தாா். அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டும், உரிய மேற்பாா்வையின்றி பணி செய்ய நிா்பந்தித்த மின் வாரிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடைநிலை ஊழியா்களான கம்பியாளா், கேங்மேன் பணியாளா்களை தற்காலிக பணியிடைநீக்கம் செய்த நடவடிக்கையைக் கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில், வட்டச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலையில், மின் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் உ... மேலும் பார்க்க

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். பெரம்பலூரில் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் ... மேலும் பார்க்க