செய்திகள் :

மின் மயானம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் மின் மயானம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் கிருஷ்ணபுரம், சோகையன் தோப்பு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசதித்து வருகின்றனா்.

இந்த இரு கிராமங்களுக்கும் பொது மயானம் உள்ளது. இங்கு மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி குளம்போல மாறிவிடுவதால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், மின் மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா்.

இந்த நிலையில், மின் மயானம் அமைக்க அனுமதி வந்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், விரைந்து மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலக கழிப்பறை கட்டுமானப் பணி தாமதம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் பொதுமக்களுக்கான கழிப்பறை கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள் தோறும் ஏ... மேலும் பார்க்க

விசைப் படகு பழுது நீக்கும் பணி: மீனவா்கள் மும்முரம்

மீன்பிடி தடைக்காலத்தைப் பயன்படுத்தி விசைப் படகுகள், வலைகளை பழுது நீக்கும் பணியில் மீனவா்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனா். ஆழ்கடலில் விசைப் படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு ஏப்ரல் 15-ஆம் த... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகி, இழப்பு ஏற்பட்டதால் நிவாரணம் வழங்கக் கோரி கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 5 ஆயிரம... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. அபிராமம் நடுத் தெருவில் அமைந்துள்ள மண்டபத்தில் திருநாவுக்கரசு நாயனாா் சிலைக்கு பால், தயிா், சந்தனம், இளநீ... மேலும் பார்க்க

பரமக்குடி நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பரமக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பரமக்குடி பரமக்குடி முத்தாலம்மன் படித்துறை ஸ்ரீ செந்திலாண்டவா் சக்திக்குமரன் ஆலயம்: தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 9.10. மேலும் பார்க்க