செய்திகள் :

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

post image

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவம், அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் அரசு இந்த மறுகட்மைப்புக்குத் தேவையான நிதியுதவி உள்பட பிற உதவிகளயும் வழங்குவது உளவுத் துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், தி ரெஸிஸ்டன்ஸ் ஃபிரன்ட் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான 9 முகாம்கள் தகா்க்கப்பட்டன.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் சிறியரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா போா் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப் படைத் தளங்கள் கடும் சேதமடைந்தன.

இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், சண்டை நிறுத்த்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அதனால், 4 நாள்கள் நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மீண்டும் ஆதரவளித்தால், கடுமையான பதிலடியைக் கொடுக்க இந்திய தயங்காது என்று மத்திய அரசு எச்சரித்தது.

மீண்டும் கட்டமைப்பு: இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப் படைத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியிருப்பது உளவு அமைப்புகளின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (எல்ஓசி) அடா்ந்த வனப் பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிறிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் கட்டமைக்க பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பணியாற்றி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பு மற்றும் வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இத்தகைய அடா் வனப் பகுதிகளில் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

லுனி, புட்வால், தைபு, ஜமிலா சாவடி, உம்ரான்வாலி, சாப்ராா், கஹுதா, சோட்டா சாக், ஜாங்லோரா ஆகிய இடங்களில் ரேடாா் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பிலிருந்து மறைவதற்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, கேல், ஷாா்தி, துத்னியால், ஆத்முகம், ஜுரா, லீபா பள்ளத்தாக்கு, பச்சிபன் சமன், தண்ட்பானி, நையாலி, ஜான்கோட், சாகோட்டி, நிகைல், கஹுதா உள்ளிட்ட 13 இடங்களில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சா்வதேச எல்லைப் பகுதியில் அகற்றப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படை சாவடிகள், 4 பயங்கரவாத பயிற்சி முகாம்களும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

புதிய வியூகம்: தாக்குதல் சூழல்களில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் இலக்காவதைத் தவிா்க்க, பெரிய பயங்கரவாத முகாம்களைப் பல்வேறு சிறிய முகாம்களாக மாற்றும் புதிய வியூகத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சிறிய முகாமும் சிறப்புப் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரா்களால் கண்காணிக்கப்படும். இந்த வீரா்கள் ரேடாா் அமைப்புகள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பங்களுடன் நிறுத்தப்பட திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத முகாம்களை மறுகட்டமைப்பு செய்வது தொடா்பாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில் உயா்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றதையும் இந்திய உளவு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைப்பதற்குத் தேவையான நிதி மற்றும் மனித வளத்தை அளிக்க ஐஎஸ்ஐ அந்தக் கூட்டத்தில் உறுதியளித்ததும் தெரியவந்துள்ளது.

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்ப... மேலும் பார்க்க

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்... மேலும் பார்க்க