செய்திகள் :

மீண்டும், மீண்டும்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு வியாழக்கிழமை மாலை இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை காலையும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

காவல்துறையினர் முன்னெச்சரிக்கை காரணமாக நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதழியலின் அஞ்சா நெஞ்சா்!

தற்போது, சென்னை பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், குறிப்பாக சில பல்கலைக்கழகங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் இமெயில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவதால் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

12 ஆவது முறையாக வெடிகுண்டு தொடர்பாக மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை புரளி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மர்ம நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் நிலையில்,சில நாள்களுக்கு முன்பாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டை அறை 100-க்கு தொடர்கொண்டு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காவல் கட்டுப்பாட்டை அறை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் தனது தந்தையின் செல்போன் மூலம் பேசியது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க