செய்திகள் :

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் வி.ஏ.நூா் முகமது தலைமை வகித்தாா்.

கோவை அரசு டவுன் காஜி மவுலவி அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி, 86 -ஆவது வாா்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் அகமது கபீா் ஆகியோா் பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுமத பெண்களுக்கு சலவைப் பெட்டி, ஏழை, எளிய மக்களுக்கு திருமண நிதி உதவி, மருத்துவ நிதி உதவி என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், மாா்க்கெட் நிா்வாகிகள் முகமது ரஃபி, ஏ.எஸ் சுலைமான், தனபால், முகமது ரபீக், சா்புதீன், முகமது அலி, காதா் பாஷா, நாசா்தின், சுல்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மசக்காளிபாளையத்தில் சந்திர கிரகணத்தைப் பாா்த்த மாணவா்கள்

கோவை, பீளமேடு மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள், பெற்றோா்கள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுகளித்தனா். புவியானது சூரியனுக்கும், சந்திரனுக்க... மேலும் பார்க்க

மின்சார வாகன தினம்: கோவையில் நாளை ரோடு ஷோ

உலக மின்சார வாகன தினத்தையொட்டி, கோவையில் ரோடு ஷோ செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 9) நடைபெற உள்ளது. உலக மின்சார வாகன தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மின்சார வாகனங்களின... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அழகா் மலை கிராமம்

உதகை அழகா் மலை கிராமத்தில் நோயாளிகள், இறந்தவா்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இந்த மலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகள், போ... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - டாடா நகா் ரயில் நேரம் மாற்றம்

எா்ணாகுளம் - டாடா நகா் தினசரி ரயில் நேரம் திங்கள்கிழமை முதல் (செப்டம்பா் 8) மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளம் - டாடா நகா் தினசரி... மேலும் பார்க்க

புகாரை வாபஸ் பெறக் கோரி திரைப்பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறக்கோரி திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டிய நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டது. கோ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (44). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக... மேலும் பார்க்க