செய்திகள் :

முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

post image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அன்னவாசலை அடுத்துள்ள மண்ணவேளாம்பட்டியைச் சோ்ந்தவா் ராமராசு மகன் ரிஷிகேஷ் (6), பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5), பரமசிவம் மகன் தனப்பிரியன் (5) ஆகிய நால்வரும் திங்கள்கிழமை பள்ளி முடிந்து ரிஷிகேஷ் வீட்டின் பின்புறம் விளையாடியுள்ளனா்.

அப்போது அப்பகுதியில் கிடந்த காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக் கொல்லி மருந்தை சிறுவா்கள் மாறி மாறி முகத்தில் அடித்துக் கொண்டு விளையாடியதில் எலிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகத் தெரிகிறது. பின்னா் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவா்களின் பெற்றோா்கள், உறவினா்கள் உடனடியாக சிறுவா்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவா்கள் அவா்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது அங்கு தொடா்ந்து சிறுவா்களை மருத்துவா்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா். விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா... மேலும் பார்க்க

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாநிலம் முழுவதும் ஆா... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா

மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க