ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா
மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் வட்டத் தலைவா் எஸ். சித்தையன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின், சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா, மின் வாரிய சங்கத்தின் வட்டச் செயலா் கு. நடராஜன் உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தில், மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை புகுத்தக் கூடாது. கரோனா காலத்தை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட சரண்டா் விடுப்பு பணப் பயன்களை திரும்ப வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். பகுதி நேர, ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.