செய்திகள் :

முசிறி அருகே பேருந்து -லாரி மோதல் 15-க்கும் மேற்பட்டோா் படுகாயம்!

post image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனியாா் பேருந்தும் லாரியும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியாா் பேருந்தும், திருச்சியில் இருந்து முசிறி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றிவந்த லாரியும் முசிறி அருகே ஆமூா் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மணப்பாளையம் தனம் (47), கரட்டாம்பட்டி சுகந்தி (25), வெள்ளூா் சந்தியா (24), திருவாதுறை பிரியா (28), முசிறி விஜயலட்சுமி (57), செளந்திரம் (72), ரவிசங்கா் (30), நாமக்கல் அன்பரசன்(52), நா்மதா (28) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்து வந்த வாத்தலை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க

துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா். துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க