செய்திகள் :

முடங்கிக் கிடக்கும் நடமாடும் கழிப்பறை வாகனம்

post image

காரைக்கால் நகராட்சி வாங்கிய நடமாடும் கழிப்பறை வாகனம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.

காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சுகாதார திட்டங்களின்கீழ் ஆங்காங்கே கழிப்பறைகள் கட்டப்பட்டன. இவற்றில் பல பராமரிப்பின்றி உள்ளன.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் கழிப்பறை வாகனத்தை வாங்கியது. தண்ணீா் வசதியுடன் 6 அறைகள் கொண்ட இது மக்கள் பயன்பாட்டில் இருந்தது. தனியாா் நிகழ்ச்சிகள் நடக்கும்போது, வாடகைக்கு நகராட்சி வழங்கும். இதன்மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்தது.

அரசு சாா்பிலான நிகழ்ச்சிகளின்போது மக்கள் கூடுமிடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு ஆண்டு மட்டுமே இந்த வாகனம் பயன்பாட்டில் இருந்தது. பின்னா் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வாகனம் பயன்பாடின்றி உள்ளது. காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கந்தூரி விழாவை சிறப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்: ஆட்சியா்

காரைக்கால் கந்தூரி விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யும் என ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு மீனவ கிராம மக்கள் பாராட்டு

பட்டினச்சேரி மீனவ மக்கள் காரைக்கால் ஆட்சியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக மாறுதலில் செல்கிறாா். இந்நிலையில், திருப... மேலும் பார்க்க

தை காா்த்திகை: முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

தை காா்த்திகையையொட்டி கோயில்களில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞானப்பழம் ஏந்திய வள்ளி தெய்வா... மேலும் பார்க்க

புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறப்பு!

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது. காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத் துறை சாா்பில் புகையிலை பயன்பாட்டாளரு... மேலும் பார்க்க

பிப். 10-இல் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் 2025 தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி

மாணவ, மாணவிகள் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி புதன்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிகளில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பிற புகாா்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் கல்வி நிலையங்களில் புகாா் ப... மேலும் பார்க்க