செய்திகள் :

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

post image

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. அப்போது காலை 10.30 மணியளவில் முதல்வர் ஜக்பீர் சிங் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சடலம்
சடலம்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை அளித்த தகவலின் படி, ``முதல்வர், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார் எனத் தெரிகிறது. முதல்வரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இரண்டு மாணவர்களையும் தலைமுடி வெட்டவும், சரியாக உடை அணியவும், பள்ளியின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு மாணவர்களும் மைனர்கள்.

அவரை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளில், மாணவர்கள் முதல்வரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடுவது பதிவாக்கியிருக்கிறது. விரிவான விசாரணைக்குப் பிறகுதான் கொலைக்கான சரியான சூழ்நிலைகள், காரணங்கள் தெரியவரும்" என்றனர்.

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க