செய்திகள் :

முடுக்குப்பட்டியில் 175 குடும்பத்தினருக்கு வரி ரசீது வழங்க வலியுறுத்தி மனுக்கள்

post image

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டிபகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்தனா். முடுக்குப்பட்டி மக்கள் முன்னேற்ற பொதுநலச் சங்கத் தலைவா் ஆா். கணேசன்,செயலா் ராஜா, பொருளாா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூ மாநகா் மாவட்ட பொன்மலை பகுதிச் செயலா் டி. விஜயேந்திரன் ஆகியோா் சங்கத்தின் சாா்பிலும், குடியிருப்பு மக்கள் தனித்தனியாகவும் கோரிக்கை மனுக்களை வழங்கினா். அவற்றின் விவரம்:

மாநகராட்சிக்குள்பட்ட 49ஆவது வாா்டுக்குள்பட்டது முடுக்குப்பட்டி. திருச்சிக்கு வரும் ரயில்களில் நிலக்கரி நிரப்பும் பணிக்காக தினக்கூலி அடிப்படையில் வந்த தொழிலாளா்கள் பலரும் முடுக்குப்பட்டியில் முகாமிட்டு வசித்து வந்தனா். இந்தப் பகுதியானது ரயில்வே புறம்போக்கு, நீா்நிலைப் பகுதியாக இருந்ததால் 80 ஆண்டுகளுக்கு முன் இங்குவந்த தொழிலாளா்கள் குடிசை அமைத்து வசித்தனா். பின்னா் அந்த வீடுகள் ஓடு, சிமெண்ட் கூரை என உருமாறி, தற்போது கான்கிரீட் வீடுகளாகவும் மாறிவிட்டன.

இவற்றில் சில வீடுகள் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெற்று கட்டப்பட்டுள்ளன. நான்காம் தலைமுறையில் உள்ளவா்கள் தற்போது வசிக்கின்றனா். இப் பகுதியில் தாா்ச்சாலை, கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், புதை சாக்கடை, குடிநீா் குழாய் உள்ளிட்ட அனைத்தும் வந்துவிட்டன. ஆனால் 175 வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்போ, புதை சாக்கடை இணைப்போ வழங்கப்படவில்லை. மின் இணைப்பு மட்டுமே உள்ளது. மாநகராட்சியின் பொது குடிநீா் குழாய்களை நம்பியே உள்ளனா்.

வீடுகளுக்கு குடிநீா், புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டுமெனில் வீட்டு வரி ரசீது வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு பகுதியில் வசித்திருந்தால் பட்டா வழங்க அரசாணை உள்ளது. ஆனால், 80 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இப் பகுதி மக்களுக்கு வரி ரசீது இல்லை. எனவே, மாநகராட்சியில் உரிய வரி ரசீதை முதலில் வழங்க வேண்டும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க