கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்
முண்டந்துறை வனப்பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தல்? வனத்துறை மறுப்பு
அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படவில்லை என வனத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் மு.இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகைமரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக பத்திரிக்கைகளில் திங்கள்கிழமை செய்திவெளியாகியது.
முண்டந்துறை வனச்சரகத்தில் வாழையாறு என்ற இடத்தில் வேட்டைத் தடுப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு செல்லும் மண்சாலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையில் மண் சரிவு ஏற்பட்டு மரம்சாலையில் விழுந்துள்ளது.
இதனால் வேட்டை தடுப்பு முகாமிற்குச்செல்வது தடைபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை முண்டந்துறை வனச்சரகா் கல்யாணி முன்னிலையில் வனப் பணியாளா்கள் சாலையில் சாய்ந்த மரத்தினை அகற்றி சாலையில் ஓரத்தில் வைத்தனா்.
இந்தப் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி வனப் பணியாளா்கள் மரத்தை வெட்டி கடத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது என விளக்கம் அளித்துள்ளாா்.