செய்திகள் :

கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்

post image

சென்னை: கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தமிழக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஷெகாவத், சென்னையில் இன்று செய்தியாளர்களிடையே விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும். இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும் வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழக ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அயோத்தியில் அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதை நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா். கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.சென்னை தேனாம்பேட்டையில... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்: திமுகவுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க... மேலும் பார்க்க

சென்னையில் பலத்த மழை! 19 மாவட்டங்களில் இரவு வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் 18 மாவட்டங்களிலும் இரவு வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுதிருவண்ணாமலைராணிப்பேட்டைவிழுப்புரம்கள்ளக்குறிச்சிசிவகங்கைராமநாத... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து 12ஆம் தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவைக்கவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர், நேரில் பார்வையிட்டார். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ... மேலும் பார்க்க