செய்திகள் :

மேட்டூர் அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு

post image

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து 12ஆம் தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவைக்கவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர், நேரில் பார்வையிட்டார்.

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையடுத்து மேட்டூர் அணையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையின் இடது கரை மற்றும் வலது கரை, மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வலது கரையில் விழாமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முன்னேற்பாடு பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கனமழை: 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.தமிழக... மேலும் பார்க்க

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்!

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு – உயர்சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுத... மேலும் பார்க்க

தமிழகத்தில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் தமிழகத்தில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையினால்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 ... மேலும் பார்க்க

வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சா... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களையொட்டி சென்னையில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தற... மேலும் பார்க்க