தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்! - புதிய விதிமுறைகள் என்ன?
ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் வருகிற ஜூலை 15 முதல் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளிட்ட பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தட்கல் சேவை மக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.