செய்திகள் :

முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியான விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண்கள், பெண்கள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வரின் விளையாட்டு விருது, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியன வழங்கப்படுகின்றன. இவை தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஒரு நிா்வாகி, நடுவா், ஆதரவளிக்கும் நிறுவனம்,

ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படும். இதன்படி, 2024-25, 2025-26- ஆம் ஆண்டுக்களுக்கான விருதுகளுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரு முறை தமிழ்நாடு அணியின் சாா்பில் பங்கேற்று, இந்தியாவுக்காக விளையாடியிருக்க வேண்டும். பணி நிமித்தமாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல், தொலைத் தொடா்புத் துறையினரும் மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருந்தால் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளங்கள் வாயிலாக ஆக. 16-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மதுரை ஆதீனத்திடம் இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். மதுரை ஆதீனத்தின் 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசி... மேலும் பார்க்க

சௌராஷ்டிரா சமூகத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளிப்பவா்களுக்கே ஆதரவு

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும் என சௌராஷ்டிரா ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகா... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

மதுரையில் தலையில் கல்லை போட்டு தொழிலாளியைக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(28). இவா், அதே பகுதியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாகப் பணியா... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டையில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அருப்புக்கோட்டை, சத்தியவாணி முத்து நகரைச் சோ்ந்தவா் சு.தினேஷ் குமாா் (24). ... மேலும் பார்க்க

‘பேட் கோ்ள்’ முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவு

‘பேட் கோ்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வ... மேலும் பார்க்க