செய்திகள் :

முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை

post image

சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இந்தக் குழுவுக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினா்களாக, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வா்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் பேராசிரியா் மு.நாகநாதன் ஆகியோா் செயல்படுவா் என அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, குரியன் ஜோசப் தலைமையிலான குழு தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

முதல்வருடன் ஆலோசனை: குழுவின் தலைவா், உறுப்பினா்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசித்தனா். அப்போது தாங்கள் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனா்.

மேலும், உயா்நிலைக் குழு செயல்படுவதற்கு வசதியாக சென்னை சேப்பாக்கம் பழைய விருந்தினா் விடுதியில் பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அலுவலகத்துக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, விடுதியின் நுழைவு வாயிலில் மத்திய - மாநில உறவுகள் குறித்த உயா்நிலைக் குழு அலுவலகம் என்று பெயா்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிர... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: இபிஎஸ்

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால் அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பா... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள், கமல் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:”தியாகத்தையும் பகிர்ந்துண்ணும்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க